Thursday, May 21, 2009

Sutta Kavidaihal

கையளவு இதயத்தில் கோடியளவு உன் நினைவுகள் .........................

எதையும் பிடிக்கவில்லை உன்னை காணும் வரை இப்போது பிடிக்கவில்லை என்ற வார்த்தையும் பிடித்து இருக்கிறதுஆம் என்னுள் மாற்றம் தந்தவள் நீதானே

உன்னைக் காதலித்துக்கொண்டிருக்கும்போதுநான் இறந்துபோவேனாஎன்பது தெரியாது.ஆனால்நான் இறக்கும்போதும்உன்னைக் காதலித்துக்கொண்டிருப்பேன்என்பது மட்டும் தெரியும்....

********

சுறாமீன் நீந்திக்கொண்டே இருக்காவிட்டால் இறந்துவிடும் நான் உன்னைக்காதலித்துக்கொண்டே இருக்கவிட்டால் இறந்துவிடுவேன்....

நீ யாருக்கோ செய்தமெளன அஞ்சலியைப்பார்த்ததும்...எனக்கும்செத்துவிடத் தோன்றியது

********

நான் வழிபடஇந்த உலகத்தில்எத்தனையோ கடவுள்கள்இருக்கிறார்கள்.நான் பின்பற்றஇந்த உலகத்தில்எத்தனையோ மதங்கள் இருக்கின்றன.ஆனால்,நான் காதலிக்கஇந்த உலகத்தில்நீ மட்டும்தான் இருக்கிறாய்.

********

சிந்திய மழைமீண்டும் மேகத்துக்குள் போவதில்லைஆனால்,ஒவ்வொரு முறையும்நீ சிந்தும் வெட்கமெல்லாம்மீண்டும்உன் கன்னத்துக்குள்ளேயேபோய்விடுகிறதே

.****************'

நிலா ஏன்தேய்ந்து தேய்ந்து வளர்கிறது?'நீ அடிக்கடி'நேரமாயிடுச்சு போகணும்' என்றுஉன் வீட்டுக்குப்போய்விட்டுப் போய்விட்டு வருகிறாய் அல்லவாஅதனால்தான்.

*********

தான் வரைந்த ஓவியத்தைகடைசியாக ஒரு முறைசரி செய்யும் ஓவியன் போலநீ ஒவ்வொரு முறையும்உன் உடையைச் சரி சய்கிறாய்.

*********

காற்றோடு விளையாடிக்கொண்டிருந்தஉன் சேலைத் தலைப்பைஇழுத்துநீ இடுப்பில்செருகிக்கொண்டாய்அவ்வளவுதான்...நின்றுவிட்டது காற்று.

*********

தொலைபேசியில்நீ எனக்குத்தானே 'குட்நைட்'சொன்னாய்.ஆனால் இந்த இரவோஅதைத்தான் நீ 'நல்ல இரவு'என்றுசொல்லிவிட்டதாக நினைத்துவிடியவே மாட்டேன் என்று அடம்பிடிக்கிறதே

.*********

என்னை ஒருகுடுகுடுப்பைக்காரனாய்நினைத்துக்கொண்டுஓர் அதிகாலையில்உன் வீட்டு முன் நின்று'இந்த வீட்டில் ஒரு தேவதைவாழ்கிறது'என்று கத்திவிட்டுகுடுகுடுவெனநான் ஓடிவந்திருக்கிறேன்.

********

நான்உன்னைக் காதலிக்கிறேன்என்பதற்காகநீயும் என்னைக்காதலித்துவிடாதே!என் கொடிய காதலைஉன் பிஞ்சு இதயத்தால்தாங்க முடியாது.

********

மழை வந்துநின்ற பிறகும்செடிகள் வைத்திருக்கும்மழைத்துளிகளைப் போலஎன் அறை வைத்திருக்கிறதுநீ வந்து போன பிறகும்உன்னை.

*********

எல்லா தெய்வங்களும்தங்களைக் குளிப்பாட்டிவிடபூசாரி வைத்திருக்கும்போதுநீ மட்டும் ஏன்நீயே குளித்துக்கொள்கிறாய்?செத்துவிடத் தோன்றியதுகிடைத்த இடத்தைநிலைப்படுத்தி கொள்ளவேகழிகின்றனஎஞ்சிய காலங்கள் அனைத்தும்

........

மழை நீரில் உன் உருவம் தோன்றியது,எங்கே?பறவைகள் வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !

நிலவில் உன் உருவம் தோன்றியது,எங்கே?மேகம் வந்து மறைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !

வானவில்லில் உன் உருவம் தோன்றியது,எங்கே?வெளிச்சம் வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன் !

நட்சத்திரத்தில் உன் உருவம் மின்னியது ,எங்கே?சூரியன் வந்து உருக்கி விடுமோஎன்று கவலைப்பட்டேன் !

பூக்களில் உன் உருவம் மலர்ந்தது ,எங்கே?பிறர் வந்து பறித்து விடுவரோஎன்று கவலைப்பட்டேன் !

குழந்தையின் முகத்தில் உன் உருவம் தோன்றியது,எங்கே?அழுகை வந்து கலைத்து விடுமோஎன்று கவலைப்பட்டேன்!

இதயத்தில் உன் உருவம் தோன்றியது,எங்கே?மதங்கள் வந்து பிரித்து விடுமோ !என்று கவலைப்படுகிறேன்...

காலத்தின் நியதிகளைமாற்றும் உரிமைஇங்கு எவருக்கும் இல்லை....மாற்றங்களில் அடங்கியது தான்மனித வாழ்க்கை.

No comments:

Post a Comment